For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய 500 கரும்பு விவசாயிகள் கைது

சென்னை:

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 1000 ஆக அதிரிக்கக் கோரியும், கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள நிலுவைத் தொகயை உடனடியாக வழங்கக் கோரியும் சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலத்தினர் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனர்.

கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா கண்டனம் செய்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

சங்கக் கொடியையும் போலீஸார் எரித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கரும்பு விவசாயிகளை போலீஸார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X