வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கேன்பரா:
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது வருகிறது. அதவும் தற்கொலை செய்து கொண்ட ஆண்களில் நான்கு பேரில் ஒருவர் 15-லிருந்து 24 வயதுடையவர் என்பது ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியல் துறை வெளியிட்ட அறிக்கையில் 1998-ம் ஆண்டில் 2,683 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு என்றாலும், 1921-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் இது இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்கொலை செய்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ரஷ்யா உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் உள்ளன. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா 8-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந் நாட்டின் பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. நகரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது கிராமப் பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் தெரிவிக்கிறது.