வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நியுசிலாந்தில் நிலநடுக்கம்
வெலிங்டன்:
நியுசிலாந்து நாட்டில் வியா ழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலையோரங்களில் இருந்த கடைகள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் சேதமடைந்தன.
அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட இந் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7 என பதிவானது. சில நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலநடுக்கத்தால் உ.யிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் வசிக்கும் பகுதியில் இந் நிலநடுக்கம் ஏற்படாததால் பாதிப்பு அதிக அளவில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications