வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
புதுவை அரசியல் நிலவரம்: மக்களுக்கு விளக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் - புதுவை திமுக முடிவு
புதுவை:
புதுவையில் தற்போதைய அரசியல் நிலவரத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லாத பி. சண்முகம், புதுவை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 33 பேர் கொண்ட அமைச்சரவையில் கூடுதலாக ஒருவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளதாக என்று துணைநிலை ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
புதுவையில் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. சட்டப்பேரவையில் மார்ச் 27-ம் தேதி பி. சண்முகம் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேச எதிர்க்கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. புதுவையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதுவையில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார் ஜானகிராமன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications