வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீரில் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கிராமத்தில் உயர்மட்டக் குழு விசாரணை
புது தில்லி:
காஷ்மீரில் தீவிரவாதிகளால் 36 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டிசிங்போரா கிராமத்தில் உயர்மட்டக் குழு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் சாமனலால் குப்தா, முன்னாள் தில்லி முதல்வர் மதன்லால் குரானா, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் பரம்ஜித் சிங் சார்னா, தில்லி பகுதி குருத்வார் பிரபந்தக் கமிட்டித் தலைவர் அவ்தார் சி ஹித், தில்லி தொழிற்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.எஸ். பாலி, பாஜக எம்பி எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் கொண்ட குழு இவ் விசாரணையை மேற்கொண்டது.
முன்னதாக காஷ்மீர் புறப்பட்ட இக் குழுவினருக்கு பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications