வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தேசிய அளவில் ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு - நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.32 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி

புது தில்லி:

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் ரூ.1.32 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.32 சதவீதம் அதிகமாகும்.

பொறியியல் பொருட்கள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்னணு பொருட்கள், ரசாயனம் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள், ஜவுளி, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததே இதற்குக் காரணம்.

2000-01-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கையுடன் தற்போதைய ஏற்றுமதி நிலை குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி அளவைப் பொறுத்தவரை உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா 31-வது இடத்தில் உள்ளது. மேலும், உலக ஏற்றுமதி சதவீதத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 0.6 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏற்றுமதிப் பொருட்களில் தோட்டப் பயிர்கள், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள், தோல், கனிமம் மற்றும் தாதுப் பொருட்களின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

ஏற்றுமதி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி சதவீதமும் அதிகரித்துள்ளது. உரம், பெட்ரோலியப் பொருட்கள், முத்துக்கள், ரத்தினக் கற்கள், ரசாயனப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரித்துள்ளதால் போக்குவரத்துச் சாதனங்கள், சமையல் எண்ணெய், செயற்கை இழை போன்றவற்றின் இறக்குமதி அளவு குறைந்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+