For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தமிழகத்தில் ஊழலுக்குப் பச்சைக்கொடி - தமாகா புகார்

சென்னை:

அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஆகியவற்றுக்குத் தமிழக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது போல் சம்பவங்கள் நடைபெறகின்றன என்ற சட்டப்பேரவையில் தமாகா உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் செல்லக்குமார் பேசியதாவது:

கொடைக்கானலில் விதிகளை மீறி 3 ஓட்டல்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது தெரிந்தே செய்த தவறாகும். அதற்காக அரசாணையில் (G.O.) அடிப்படை விதிமுறைகளையே மாற்ற முயற்சி நடந்துள்ளது. அந்த பகுதியில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அரசாணை முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் வெளியாக முடியுமா? .

அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஆகியற்றுக்கு முதல்வர் பச்சைக்கொடி காட்டுகிறாரா? பாலுக்குக் காவல், பூனைக்கும் தோழன் என்ற முறையில் நடக்க முயற்சிக்கிறாரா.

சென்னைக்குக் குடிநீர் தரும் தெலுங்கு கங்கைத் திட்டம் ஏப்ரல் 15-ல் முடிந்து விடுமா? ஸ்ரீசைலத்தில் இருந்து கால்வாயே வெட்டப்படவில்லை.

அமைச்சர் துரைமுருகன்: நஞ்சை நிலம் காரணமாக சுமார் 13 கி.மீட்டர் தூரத்துக்குக் கால்வாய் வெட்டப்படவில்லை என்பது உண்மை. ஆனாலும், வேறு இரு மாற்று வழிகளில் தண்ணீர் கொண்டு வரப்படும்.

சுந்தரம் (அதிமுக): ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தணணீர் கொண்டு வரப்படவில்லை என்றால் முதல்வரும், அமைச்சரும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X