வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மரணமடையும்போது அழுக்காவதும் நின்று விடுகிறது.
அழுக்கு வேறு; அழுகுதல் வேறு
மரணத்தில் நிகழ்கிற அழுகல்
அழுக்கை உடல் வெளியே தள்ள இயலாத தள்ளாமையால்தான்.
உலகம் முழுவதுமே துப்புரவுத் தொழிலாளிகளால்தான் இயங்குகிறது.
பூமியை துப்புரவு செய்வது உழவு -
நூலை துப்புரவு செய்வது நெசவு -
மண்ணைத் துப்புரவு செய்வது குயவு -
கடல் துப்புரவாவது மழை -
காற்று துப்புரவாவது தென்றல்
தொடர்ந்த துப்புரவால் சுழற்சி நடக்கிறது.
நீரும் சுத்திகரிக்கிறது -
நெருப்பும் சுத்திகரிக்கிறது -
நீர் சுத்திகரித்து, தான் அழுக்கடைந்து விடுகிறது -
நெருப்பு தன்னைத் தொடர்ந்து சுத்திகரித்து
அழுக்கடைகிறது.
தண்ணீர் மாசுபடுகிறது -
சுவை குன்றுகிறது -
கலக்கிறவற்றால்
சேர்கிறவற்றால்
கூடுகிறவற்றால்
நீர்கூட நீர்த்துப் போகிறது.
தீ அழுக்கடைவதில்லை -
தன்னைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு
தூய்மையாயிருக்க
எரியத் தெரியவேண்டும்.
பலர் நினைக்கிறார்கள் -
நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியுமென்று -
அதுவும் எரிந்து போகிறதென்பது
அவர்களுக்குத் தெரியாமல் போகிறது.
தீ அழிக்கத் தானே செய்யும் -
அது எப்படி சுத்திகரிக்கிறது என்று -
அவர்களுக்குத் தெரியவில்லை
நீரைக் கூட சுத்திகரிக்க நெருப்பு தேவையென்று.
நீரைச் சூடாக்கினால்
தூய நீர் மட்டும் ஆவியாகிக் குளிரும்போதுதான்
தூய்மையான ஞீடிண்ணாடிடூடூஞுஞீ தீச்ணாஞுணூ கிடைக்கிறது.
தூய நீருக்கு
நிறமில்லை
மணமில்லை
சுவையில்லை அதைப் பருகவும் முடிவதில்லை.
கொஞ்சம் தூய்மையற்றுப் போகிறபோதுதான் -
கொஞ்சம் தாதுப் பொருட்கள் கலக்கும்போதுதான் -
நீர் இனிக்கிறது - சுவைக்கிறது.
தூயநீர் வரும்போதும் தாகத்தைத் தணிப்பதில்லை.
நீர் மட்டுமல்ல -
தங்கமும் அப்படித்தான் -
தூய தங்கம் வளைகிறது -
அதை நகையாக மாற்ற கொஞ்சம் அதன் தூய்மை கெடவேண்டும்.
தங்கம் மட்டுமல்ல -
மனிதர்களும்தான் -
முற்றிலும் தூய்மையானவர்கள் மரம்போல் இருப்பார்கள்-
சுவையற்று, உணர்வற்று, மணமற்று, நிறமற்று.
அவர்களுடன் நட்பு கொள்வதும் சிரமம் -.
நட்பு அவர்களைப் பயமுறுத்தும் -
தங்கள் தூய்மை எங்கேனும் அழுக்கடையும் ஆபத்து
நிகழ்ந்து விடுமோ என்று அவர்கள் நடுங்குவார்கள்
நேரடியாக இருக்கும்போது நெருப்பு எரிக்கிறது -
மறைமுகமாக வேறொரு ஊடகத்தின் மூலம் அணுகும்போது
அது சுத்திகரிக்கிறது -
அதுதான் நீரையும் ஆவியாக்கி
மழை பொழியச் செ-
கடலை வடிகட்டும்போதுதான் மேகமாகிறது.
சூரிய நெருப்பின் ஒளியில்தான்
செடி மண்ணிலிருக்கும் சத்தை மணிகளாகப் பிரித்தெடுக்கிறது -
அனைத்துப் படைப்புக்களும், இயக்கமும்
வெவ்வேறு சக்திகள் உற்பத்தி செய்யும்
உஷ்ணத்தின் விளைவாகத்தான்
தனக்குள் ஒரு நெருப்பு கனன்றால்தான்
தன்னைக் கற்பென்றும்,
நேர்மையென்றும்
சுய ஒழுக்கமென்றும் மனிதன் சுத்திகரிக்க முடியும் -
தனக்குள் வைராக்கியம் தீயாகக் கனியும்போதுதான்
உலகத்தின் அசுத்தத்தையெல்லாம் நீக்க
நம் கண்கள் கைகளாக நீளுகின்றன.
துப்புரவுத் தொழிலாளி
சுத்தம் செய்யும்போது
சோறு அவனுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் கிடைக்கிறது -
துப்புரவு செய்பவர்கள் இல்லாவிடின்
நம்மைச் சுற்றிய அசுத்தத்திலேயே நாம் அடங்கிப் போவோம் -
அமுங்கிப் போவோம் -
மூச்சுவிட முடியாமல் - பேச்சு வர இயலாமல்.
(சாரல் இன்னும் தெளிக்கும்...)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications