தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: ஜெ.

சென்னை:

இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி இலங்கைகடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம் அருகே மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:

ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கடற்பகுதியில் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடிதுப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது.

இந்திய எல்லைப் பகுதியில் சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் தமிழகமீனவர்கள் அடிக்கடி உயிரிழக்க நேரிடுகிறது. இதில் மாநில அரசும், மத்திய அரசும்நடந்து கொள்ளும் விதம் கண்டிக்கத்தக்கது.

இந்திய எல்லைக்குள், இலங்கைக் கடற்படையினர் ரோந்து வருகின்றனர். ஆனால்நமது கடற்படையினர் அங்கு இல்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது. அவர்கள்என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இதுபோன்ற அலட்சியமான போக்கால் விலைமதிப்பற்ற தமிழக மீனவர்களின் உயிர்அடிக்கடி இலங்கை கடற்படையினரால் பறிக்கப்படுகிறது. இந்த நிலை எதிர்காலத்தில்தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும்.

உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கும் போதுமான நிவாரணத் தொகைவழங்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+