For Daily Alerts
Just In
கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது
முஷாரப் பயணம் செய்யவிருந்த விமானத்திலிருந்து ஹெராயின் மீட்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் பயணம் செய்யவிருந்த விமானத்திலிருந்து 2.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளை, பாகிஸ்தான்ராணுவம் கைப்பற்றியது.
லிபிய நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முஷாரப் அங்கு லிபிய அதிபர் முயம்மர் கடாபியைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான்இன்டர்நேஷனல் விமானம் மூலம் பாகிஸ்தான் திரும்புவதாக இருந்தது.
விமானம் கிளம்ப 2 மணி நேரம் முன்பு விமானத்தை பாகிஸ்தான் ராணுவக் குழுவினர் சோதனையிட்டனர். அப்போது இந்த ஹெராயின் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸைச் சேர்ந்த பொறியாளர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
Comments
Story first published: Tuesday, May 2, 2000, 5:30 [IST]