லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவசரக் கூட்டம் துவங்கியது
லண்டன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை துவங்கியது, புதன்கிழமையும் இக் கூட்டம்தொடர்ந்து நடைபெறுகிறது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்பட்டு வரும் மேட்ச் ஃபிக்ஸிங், லஞ்சம் மற்றும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் கிரிக்கெட்வீரர்களுக்கு உள்ள தொடர்பு ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அக்குற்றச்சாட்டை குரோனியேவும் ஒப்புக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன.
இந் நிலையில், கிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பு குறைந்துவிடாமல் தடுக்கமேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் தாயார் இறந்துவிட்டதை அடுத்து இக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த அவசர மற்றும் முக்கிய கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. லஞ்சம் வாங்கியதைவீரர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்தும் அல்லது அபராதம் அல்லது நிரந்தரமாக கிரிக்கெட் போட்டியில்பங்குகொள்ள தடை விதிப்பது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இக் கூட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தவிர கவுன்சிலில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியதலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மனோஜ் பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசூடின் அறிக்கை, பாகிஸ்தான்கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணை அறிக்கை, குரோனியே மீதான குற்றச்சாட்டு போன்றவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications