For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத 450 போலீஸார் மீது நடவடிக்கை: கருணாநிதி

சென்னை:

தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீார் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 450 போலீசார் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் செவ்வாயன்று நடந்த கேள்வி நேர விவாதத்தில் தமிழ்மாநில தேசிய லீக் உறுப்பினர் அப்துல்நாசர், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாககேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பதிலளித்தார்.

முதல்வர் பதிலுரை வருமாறு:

கள்ளச் சாராய விற்பனை, காய்ச்சுதல் மற்றும் அதற்கு முதலீடு செய்பவர்களை தண்டிக்க, மதுவிலக்குச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்படும்.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச் சாராய விற்பனைக்குமுதலீடு செய்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்தையும் கடுமையாக்கி அவர்களுக்கு தண்டனைவழங்கப்படுகிறது. இருப்பினும் அதை ஒழிக்க முடியவில்லை. எல்லா தரப்பிலும் பக்குவம் ஏற்பட்டால் தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தவறிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர், ஒருதலைமைக் காவலர், 4 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 102 இன்ஸ்பெக்டர்கள், 140 சப் இன்ஸ்பெக்டர்கள், 77 தலைமைக் காவலர்கள், 131காவலர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X