For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கூட்டுறவு வங்கியில் உபரி நிதி: தமிழக அரசு புதிய திட்டம்

சென்னை:

கூட்டுறவு வங்கிகளில் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது.

சட்டசபையில் புதன்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில் அமைச்சர்கே.என்.நேரு இதைத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கூறியதாவது: கூட்டுறவு நிதிநிறுவனங்களில் காலியாக உள்ள பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கூட்டுறவு வங்கிகளில்உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிதிநிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

கிராம அளவில் தேவை அடிப்படையில் புதிய வேளாண் கூட்டுறவு வங்கிகள் துவங்கப்படும். இவ்வாண்டில் மேலும் 200 தொடக்க கூட்டுறவு வேளாண்வங்கிகளுக்கு கட்டடம் கட்டித்தரப்படும்.

பெரம்பலூர், திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் புதிய மத்திய கூட்டுறவு வங்கிகள் துவங்கப்படும். மகளிர் சிறுவணிகக் கடன்திட்டம், கிராமபகுதிஅளவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாண்டில் புதிய வேளாண் தேசிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.

ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஊதிய உயர்வு திருத்தியமைக்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். தமிழ்நாடுகூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் மூன்று கூட்டுறவு மேலாண்மை பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் கல்வி சேர்க்கப்படும். மொத்த விற்பனைபண்டகசாலை மூலம் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X