தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள 40,000 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தாக்கதலிலிருந்து மீட்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கைஅரசு புதன்கிழமை பகிரங்கமாக உதவி கேட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், இந்தியப் பிரதமர் வாஜ்பாயை டெல்லியில் புதன்கிழமை மாலை சந்தித்து தனது நாட்டின்கோரிக்கையை தெரிவித்தார்.
மனித நேய அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்களைக் காக்க இந்திய கடற்படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்போதுகதிர்காமர், வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவுக்குத் தெரியும். எனவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கண்டிப்பாக இந்தியா உதவும் என்று பின்னர்செய்தியாளர்களிடம் கதிர்காமர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சரவையைக் கூட்டினார் வாஜ்பாய்:
கதிர்காமரின் சந்திப்பையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தை மாலையில் பிரதமர் வாஜ்பாய் கூட்டினார். அக்கூட்டத்தில்,இலங்கையின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த பத்து நாட்களுக்குள் யானை இறவு, பலாய் ஆகிய முக்கிய ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் பிடித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்திற்கு 30கிலோமீட்டர் தொலைவிலேயே அவர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications