தமிழகத்தில் இன்று
சென்னை:
பிரதமர் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவருடன் இலங்கை பிரச்சனைகுறித்து பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்துகிறார்.
இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்து வரும் கடும் சண்டையில் புலிகள் கை ஓங்கியுள்ளது. ராணுவத்தின் வசம் இருந்த யானையிறவு,பலாலி என்ற பல முகாம்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர். யாழ்பாணத்தையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் யாழ் முகாமில் உள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் வீரர்களை காப்பாற்ற இலங்கை அரசுஇந்திய உதவியை நாடியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் கூடி விவாதித்து இலங்கைக்கு ராணுவ உதவி செய்யப்படமாட்டாது என்றுஅறிவித்தது.
ஆனாலும் ராணுவ தளவாடங்கள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இப்பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியை டில்லி வருமாறு வாஜ்பாய் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று டில்லி செல்வது குறித்து தமிழக அமைச்சரவையை கூட்டி முதல்வர் விவாதித்தார். அதன்பின்னர் விமானத்தில் டில்லி சென்றார்.












Click it and Unblock the Notifications