தமிழகத்தில் இன்று
புது தில்லி:
காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளஇந்திய ராணுவத்தினருக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில் நாய்கள்பயன்படுத்தப்படுகின்றன.
இத் தகவலை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்,மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தற்போது, சியாச்சின் பகுதி ராணுவ வீரர்களுக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில்ஒரே ஒரு நாய் பயன்படுத்தப்படுகிறது. உலகின் உயரமான போர்க்களமாகக்கருதப்படும் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது.
தபால் எடுத்துச் செல்ல முதலில் இரு நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால்,அதில் ஒரு நாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டது. தற்போது பணியில் உள்ள ஒருநாய்க்கு உதவியாக, ராணுவத்தில் உள்ள 4 நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.தற்போது இந்த நாய்கள் பனிச்சரிவுப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.
சியாச்சின் பகுதியில் நிலவும் மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக, உள்ளூர்நாய்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்துக்கு ராணுவத்தைச் சேர்ந்த நாய்களுக்குப்பயிற்சி அளிக்கப்பட்டு அவை சியாச்சின் பகுதியில் பயன்படுத்தப்படும்.தேவைப்பட்டால், உள்ளூர் நாய்கள் கிடைக்கும்பட்சத்தில் அவையும் தபால் எடுத்துச்செல்லும் பணியில் பயன்படுத்தப்படும் என்றார் பெர்னான்டஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications