மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
மலேஷியாவில் மின்னல் தாக்கி போதை அடிமைகள் 5 பேர் சாவு
கோலாலம்பூர்:
மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வுஇல்லத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
போதைக்கு அடிமையான பலர், கோலாலம்பூரில் உள்ள ராவங் போதை அடிமைகள்மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். புதன்கிழமை மாலை தேநீர் அருந்தியபிறகு சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியது.
இதில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 17 பேருக்கு தீக்காயம்ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. இது பயங்கரம் என்றுமறுவாழ்வு மையத்தின் தலைவர் சே சஸாலி இஸ்மாயில் தெரிவித்தார். இந்தமையத்தில் சுமார் 700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக இடியுடன்கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
டி.பி.ஏ.