For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி சாவு

சான் பிரான்சிஸ்கோ:

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி தீபக் மல்லிக் (43), நிமோனியாநோயால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமானார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த 13 மாதங்களாகப் பணியாற்றி வந்த மல்லிக்,அமெரிக்காவில் மக்கள் தொடர்பு மற்றும் கலாசார நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததூதரக அதிகாரி ஆர்.என். அபியங்காருக்கு உதவியாக இருந்து வந்தார்.

சான் பிரான்சிஸ்கோவில் மல்லிக்குக்காக தனி பதவி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்அவர் சிங்கப்பூரில் துணைத் தூதராகப் பணியாற்றினார் என்றார் தூதரக அதிகாரிஅபிஜித் ஹால்தர்.

கல்கத்தாவில் பிறந்த மல்லிக், தில்லியில் உள்ள செயின்ட் கொலம்பல் பள்ளியிலும்,செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பயின்றவர்.

சமீப காலமாக கடுமையான நிமோனியாவில் பாதிக்கப்பட்டிருந்த மல்லிக், இருவாரங்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன்அவரது நுரையீரல்கள் செயலிழந்தன.

மல்லிக்குக்கு மனைவி சந்தனாவும் இரு மகன்களும் உள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X