குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
வாஷிங்டன்:
நாளை உலகம் அழியப் போகிறது என்கிறது "டூம்ஸ் டே தியரி". ஆனால், இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவேண்டாம் என்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா.
அப்படியே ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டாலும் கூட அதற்கு விண்வெளியையும், கோள்களையும் குறைகூறிவிட வேண்டாம் என்கிறது நாசா.
ஆனால், விண்ணில் நாளை ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. நாளை மிகப் பிரகாசமான கோள்களான மெர்க்குரி,வீனஸ், மார்ஸ், ஜீபிடர், சாட்டர்ன், நிலா ஆகியவை பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில் அணிவகுத்து நிற்கும். இதற்கு கன்ஜங்ஷன் என்று பெயர்.
இதனைத் தான் சில பழமைவாத அமைப்புகள் உலக அழிவுடன் இணைத்துப் பேசி வருகின்றன. இந்திய நேரப்படிபகல் 1.30 மணிக்கு உலகம் அழிந்துவிடும் என்பது இந்த அமைப்புகள் செய்து வரும் பிரசாரமாகும்.
ஆனால், இந்த மூடத்தனமான பிரசாரத்தை முறியடிக்க நாசா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனது வெப்சைட்டில் இந்த கன்ஜங்ஷன் குறித்த முழு விவரங்களையும் வெளயிட்டுள்ளது.
இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வானியல் அதிசயம். அப்போதெல்லாம் உலகம் அழிந்துவிடவில்லை.நாளை சில இடங்களில் இயற்கை சீரழிவுகள் நடக்கலாம். இதற்கு கூட இந்த கன்ஜங்ஷனை குற்றம் சாட்டிவிடாதீர்கள் என்கிறது நாசா.
இதே போல வரும் 17ம் தேதியும் மீண்டும் கோள்கள் ஒரே வரிசையில் வரும்.












Click it and Unblock the Notifications