தமிழகத்தில் இன்று
சொத்து குவிப்பு வழக்கு: மே 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக முன்னாள் அமைச்சர்சத்தியமூர்த்திக்கு உத்தரவு
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வி.சத்தியமூர்த்தி உள்பட மேலும் 6 பேர், மே 18-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராகவேண்டும் என்று நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
முன்னாள் அதிமுக அமைச்சரான சத்தியமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும்வருமானத்துக்கு அதிகமாக ரூ.83.33 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக 2-வது சிறப்புநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரசு தரப்பில் 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைமுடிந்தவுடன் இவ் வழக்கை மே 18-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், அன்றைய தினம் சத்தியமூர்த்தியும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரதுகுடும்பத்தினர் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.