தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் விடுதலைப் புலிகளைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் தீவிரநடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக "பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை" வியாக்கிழமை முதல் அமலுக்குக் கொணடு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் தீவிரவாதத்துக்கு உதவுவது, மக்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
புலிகள் சுற்றி வளைத்துவிட்டதால் யாழ்பாணத்தில் சிக்கியுள்ள 40,000 இலங்கை ராணுவ வீரர்களைக் காப்பாற்ற இந்தியராணுவத்தின் உதவியை இலங்கை அரசு நாடியது. ஆனால், இந்தியா உதவ முடியாது எனக் கூறிவிட்டது.
இதையடுத்து புலிகளை வெல்ல அனைவரும் உதவ வேண்டும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார், அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய துறைகளின் மூலம் எவ்வளவு நிதி,உதவிகளைத் திரட்ட முடியுமோ அனைத்தையும் திரட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தெற்காசியாவில் உள்ள பிற நட்பு நாடுகளின் உதவியை அரசு கோர வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் அரசை வலியுறுத்திவருகின்றன. குறிப்பாக இந்த நாடுகளிடம் ஆயுதங்களை கேட்டுப் பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றன.












Click it and Unblock the Notifications