For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ரயில் பயணிகளின் தாகம் தீர்க்கும் ராஜுபாய்

மும்பை:

நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு ரயில்கள் தண்ணீர் கொண்டு செல்கிறதோஇல்லையோ, ரயிலில் பயணம் செய்யும் ஒருவர் ரயில் பயணிகளின் தாகம் தீர்க்கதண்ணீர் விநியோகிக்கிறார். இலவசமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சேவையை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயதான அந் நபருடைய பெயர் ராஜ்குமார் சாகர்மல் சின்ஹானியா. ஆனால்,அவரை ராஜுபாய் என்றுதான் ரயில் பயணிகள் அழைக்கின்றனர். மும்பை,தாகுர்லியைச் சேர்ந்த இவர், ஒரு நிறுவனத்தின் அக்கவுண்டன்டாகப் பணியாற்றிவருகிறார்.

தினமும் காலையில் தாகுர்லி ரயில் நிலையத்தில் பணிக்குச் செல்லும் அவர் தன்னுடன்சுமார் 150 பாட்டில்களல் குளிர்ந்த நீரையும் எடுத்துச் செல்கிறார். பாட்டில்களுடன்ரயிலின் ஒவ்வொரு கம்பார்மெண்டுக்கும் செல்கிறார். தாகத்தால் தவிக்கும்பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார்.

மாலையில் வீடு திரும்பும்போதும் இச் சேவையை அவர் தொடர்கிறார். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக இப் பணியை அவர் ஆற்றி வருகிறார். தாகத்தால்தவிப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தால், அது கடவுளுக்குச் செய்யும் சேவையாகக்கருதுகிறேன் என்கிறார் ராஜுபாய்.

மிகவும் கூச்ச சுபாவம் உடைய ராஜுபாய்க்கு மனைவியும், 11 வயது மகளும்உள்ளனர். ராஜுபாயின் சேவைக்கு இவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கணவரின்சேவைக்கு ஏற்ப வீட்டில் உள்ள பிரிட்ஜில் தண்ணர் பாட்டில்களை நிரப்பி வைப்பதுஅவர்களது பணியாகும்.

தண்ணீர் மட்டுமல்ல தன்னுடன் அத்தியாவசிய மருந்துகள், பாக்கு போன்றவற்றையும்ராஜுபாய் எடுத்துச் செல்கிறார். அவற்றுக்கும் அவர் காசு வாங்குவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X