For Daily Alerts
Just In
குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
மலேசிய கிராமங்களில் காட்டு யானைகள் தாக்குதல்
கோலாலம்பூர்:
மலேசிய நாட்டின் வட பகுதியில் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்துவருகின்றன.
சமீபத்தில் கிராமத்தில் நுழைந்த 4 யானைகள் ஆயிரக்கணக்கான வாழை மரங்களையும் நெல் உள்ளிட்டபயிர்களையும் நாசப்படுத்தின. யானைகளின் தாக்குதலால் அப் பகுதியில் இந்த கிராமங்களில் மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள கோதா மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானைகள் தாக்குதலில் 70,000 வாழை மரங்கள் நாசமாயின. பிற பழ மரங்களையும் யாகைைள் விடவில்லை.இதையடுத்து இந்த யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை ரேன்ஜர்கள்அனுப்பப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 4, 2000, 5:30 [IST]