தமிழகத்தில் இன்று
புது தில்லி:இந்த ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ரூ.1000 நோட்டுக்கள்புழக்கத்தில் வெளியிடப்படும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர்பாலாசாஹிப் விகே பாட்டீல் தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் அவர் கூறியதாவது:
ஜூலை மாத இறுதிக்குள் 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். 1000 ரூபாய்நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது நாட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அதிக அவில் புழக்கத்தில்உள்ளதாகப் புகார்கள் வருகின்றன. இவை எல்லாம் 1987-ம் ஆண்டு வெளியிடப்பட்ட500 ரூபாயின் மாதிரிகளாகும். இனிமேல், பழைய 500 ரூபாய் நோட்டுக்களைமீண்டும் விநியோகிக்க வேண்டாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கள்ள நோட்டுக்களை எளிதில் அடையாளம்கண்டுபிடிக்கமுடியும் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.