கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பெய்ரூட்:இஸ்ரேல் எல்லையில், லெபனான் நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள்,கொரில்லா தீவிரவாதிகளின் ஆயுதக் கிட்டங்கி ஆகியவற்றின் மீது இஸ்ரோல் போர்விமானங்கள குண்டுவீச்சு நடத்தின.
இந்த குண்டுவீச்சில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் டமாஸ்கஸ் நகரங்களுக்குஇடையிலான நெடுஞ்சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. குண்டுவீச்சில் ஒருவர்காயமடைந்தார். மின் நிலையங்களில் ஒன்று முற்றிலும் நாசமடைந்தது.
ஹிஸ்புல்லா கொரில்லா தீவிரவாதிகள், வடக்கு இஸ்ரேலில் வியாழக்கிழமைஏவுகனைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டார். இதற்குப்பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் இத்தாக்குதலைத் தொடுத்தது.
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த பிப்ரவரியில் மூன்று மின்நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு அரரபு நாடுகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன.
தற்போதைய தாக்குதல் மூலம் இஸ்ரேல், லெபனான் இடையே பதற்றம்அதிகரித்துள்ளது.