தமிழகத்தில் இன்று
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாடு நடத்தியது தொடர்பாக தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருடன் அந்த இயக்கத்தின் 200 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில்வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் 40 ஆயிரம் ராணுவத்தினரை சுற்றி வளைத்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் மாநாடுநடத்தக்கூடாது என்று தமிழக போலீசார் 144 தடையுத்தரவு போட்டுள்ளனர்.
இதையும் மீறி நெடுமாறன் சிதம்பரத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். இதையடுத்து அங்கே சென்ற போலீசார் நெடுமாறன் உள்படஅந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 200 பேரைக் கைது செய்தனர்.
சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
யு.என்.ஐ.