தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
கோவையில் காலரா நோயால் 500 பேர் பாதிப்பு

உடுமலை அருகே காலரா நோயினால் 540க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. குமாரளங்கா என்ற கிராமத்திற்கு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதி மக்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமை பழனியம்மாள் (65) என்ற பெண் இறந்தார். இதுவரை 540 க்கும் மேற்பட்டோர் காலரா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

திருப்பூரில் வாலிபால் போட்டி

திருப்பூர்:

திருப்பூரில் அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி துவங்கியது. திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இப்போட்டி நடந்துவருகிறது.

கோவையில் அரசுப்பொருட்காட்சி

கோவை:

கோவையில் அரசுப் பொருட்காட்சியை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இப்பொருட்காட்சியில் பல பொருட்கள்இடம்பெற்றுள்ளன. இப்பொருட்காட்சி இரண்டு மாதங்கள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+