தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சவுதியில் 3 பேரை கொன்றவர் கேரளத்தில் கைது

திருவனந்தபுரம்:

சவுதி அரேபியாவில் 3 கொலைகள் செய்துவிட்டு தப்பியவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

நசீம் என்ற அந்த நபர் தனது சகோதரர் தாஜூதீனையும் மற்ற இருவரையும் 1995ம் ஆண்டில் கொலை செயதார்.இவருடன் சேர்ந்து கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஷராப் அல்தீன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாஜூதீன், மல்லபுரம் அஸ்ரப், குஞ்சுமுகம்மத் ஆகியோர் நியூமதினா நகரில் தங்கியிருந்தனர். 1995ம் ஆண்டுஆகஸ்ட் 8ம் தேதி அவர்கள் வீட்டில் தீ பரவியது. பலத்த காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தனர்.

முதலில் இது தீ விபத்து என்று தான் கருதப்பட்டது.

நசீம் தனது சகோதரர் தாஜூதீனின் உடலுடன் கேரளாவுக்கு வந்தார். மீண்டும் சவுதி சென்றால் பிரச்சனை ஏற்படும்என்று கருதிய நசீம் கேரளாவிலேயே தங்கிவிட்டார்.

ஆனால், சவுதி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இது விபத்தல்ல, கொலை என்று தெரியவந்தது.இதையடுத்து இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து நசீமை சவுதி போலீசார் தேடி வந்தனர்.

சனிக்கிழமை கடக்கல் போலீஸ் நிலைய பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நசீமை கேரள போலீஸ் கைதுசெய்தது. இவர் சவுதி போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+