தமிழகத்தில் இன்று
ஜம்மு:
காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் அருகே மான்வா என்ற காட்டுப்பகுதியில் ராணுவத்தினர் தீவிரவாதிகளைப் பிடிக்கும் நோக்கில் ஆங்காங்கே தாக்குதல்கள் நடத்தினர். அப்போதுஅங்கேயுள்ள பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.
இருதரப்பினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது நான்கு தீவிரவாதிகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயேகுண்டுபாய்ந்து பலியானார்கள்.
மேலும் அப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிரமாய்த் தேடியதில் அங்கிருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகள், 4 கிலோ வெடிமருந்துகள், சில பத்திரிக்கைகள்,போன்றவை கைப்பற்றப்பட்டன.
பாரமுல்லா, மான்வா பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நடந்து வருகிறது. ராணுவத்தினர் தீவிரவாதிகளைப் பிடிக்கும் எண்ணத்தில் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.