தமிழகத்தில் இன்று
மணிலா:
ஐ லவ் யூ வைரஸை உருவாக்கி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அடையாளம் தெரிந்தது. சுமார் 23 வயதான அவர் மணிலாவை சேர்ந்தவர்என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரஸ்ட் வாரன்ட் பிறப்பிப்பதற்காக போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
கடந்த வாரம் ஈ மெயில் மூலம் ஐ லவ் யூ என்ற வைரஸ் அனுப்பப்பட்டது. அந்த ஈ மெயில் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவர்களின் கம்யூட்டர்கள் எல்லாம்செயலிழந்தது.
பில் கிளின்டன் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்பட அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்பட உலக நாடுகளில் பல லட்சக்கணக்காணகம்ப்யூட்டர்கள் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டன.
பல்லாயிரம் கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுத்துறைப் போலீசார் இந்தக் கம்யூட்டர் வைரசைஏவிவிட்டவர் யார் என்று தீவிரமாய்த் தேடி வந்தனர்.
அப்போது மணிலாவிலிருந்துதான் இந்த ஐ லவ் யூ வைரஸ் பரப்பி விடப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வைரசை பரப்பியவர் சுமார் 23வயதிற்குட்பட்டவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் மணிலாவைச் சேர்ந்த அவர் அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டேயிருப்பவர்என்றும் தெரிய வந்தது.
ஆனால் அவரை மட்டும் பிடித்தால் போதாது. அவர் இந்த வைரஸை பரப்பி விடுவதற்கு உபயோகித்த கம்யூட்டர்கள் மற்றும் இதர சாதனங்களையும்கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்கள் ஸ்தம்பிப்பதற்குக் காரணமாக இருந்த குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம். அவரைக் கண்டுபிடித்ததும் கைது செய்வதற்கு ஏற்றவகையில் அரஸ்ட் வாரன்டும் நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.டி.ஐ.












Click it and Unblock the Notifications