For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கல்கத்தாவில் பஸ்-லாரி மோதல்: 20 பேர் பலி
மிட்னாபூர்:
லாரியும், பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
கல்கத்தா அருகே திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது. இவ்விபத்தில் மேலும் 50 பேர்படுகாயமடைந்தனர்.
மான்குரேல் பகுதியிலிருந்து பான்ஸ்கோரா பகுதி நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்த பஸ் எதிரே வந்தலாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இரண்டு வாகனங்களும் அருகிலிருந்த புதருக்குள் தூக்கி வீசப்பட்டது. அப்போது பஸ் மற்றும் லாரியில் 20 பேர்மரண ஓலமிட்டுக்கொண்டே இறந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இவ்விபத்தில் இறந்தவர்களது சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, May 9, 2000, 5:30 [IST]