தமிழகத்தில் இன்று
டாக்கார்:
சியோரா லியோனில் வசிக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற பிரிட்டன் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்காக தனதுபடைகளையும் விமானங்கைளயும் அனுப்பி பிரிட்டன் பிரஜைகளை வெளியேற்றி வருகிறது.
சியோரா லியோனில் வசிக்கும் வெளிநாட்டினர் மீது அங்குள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முன்னணி நாடான சியோரா லியோனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ. நாவைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோரை அங்குள்ள தீவிரவாதக்கும்பல் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது.
சியோரா லியோனின் தலைநகர் ஃப்ரீ டவுனில் வசித்து வந்த வெளிநாட்டினரில் 5 பேர் திங்கள்கிழமை இரவு தீவிரவாதிகளால் துப்பாக்கியால்சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
இதற்கிடையே தீவிரவாதிகள் பிடியிலிருந்து பலர் சியோரா லியோனிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications