தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணம் எந்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் கைக்கு சென்றுவிடாமல் காப்போம் என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகூறினார்.
யாழ்பாணத்திலிருந்து 40,000 ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்கள் மீதான தாக்குதலைநிறுத்துவதாகவும் தற்காலிகமாக போர் நிறுத்தத்துக்குத் தயார் எனவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால். இதை ஏற்க குமாரதுங்கா மறுத்துவிட்டார். அவர் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் பேசுகையில், யாழ்பாணத்தில்உள்ள 5 லட்சம் தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம் என்றார்.
அரசு மீது மனோரீதியான போரையும் விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பணிந்துயாழ்பாணத்திலிருந்து வீரர்களை வாபஸ் பெறவே மாட்டோம் என்றார் மூத்த அமைச்சர் ஒருவர்.
இதன் மூலம் விடுதலைப் புலிகளின் நிபந்தனைகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் சந்திரிகா நிராகரித்துவிட்டார். புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணத்தை 1995ம் ஆண்டு டிசம்பரில் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. 1983ம் ஆண்டிலிருந்து தனிஈழத்துக்காக அரசுடன் புலிகள் மோதி வருகின்றனர்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்












Click it and Unblock the Notifications