தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட்: முப்படைத் தலைவர்களுடன் பர்வேஸ் ஆலோசனை
இஸ்லாமாபாத்:
அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து பேச முப்படைத் தலைவர்களுடன் பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி, காஷ்மீரில் இந்தியாவின் எந்த அடக்குமுறையையும்பாகிஸ்தான் சமாளிக்கும். எல்லையில் கடந்த வாரம் இரு தரப்பிலுமே கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தபதற்றத்தைக் குறைக்க இந்தியா முன் வர வேண்டும்.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் முயல்கிறோம். ஆனால், இந்தியா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் நாங்களும்திருப்பித் தாக்குவோம். காஷ்மீர் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இந்தியா மூடிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications