தமிழகத்தில் இன்று
டெல்லி:
இஸ்ரேலிடம் இந்தியா ஏவுகணைகளை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்ததானது.
இந்தியா இதுவரை இஸ்ரேல் நாட்டிலிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கியிருக்கிறது என்றாலும் கார்கில்போருக்குப் பின் இந்தியா மிகப்பெரிய அளவில் கடற்படை உபயோகத்திற்காக ஏவுகணைகள் வாங்குவது இதுவேமுதன்முறை.
கடற்படையின் உபயோகத்திற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை திரிசூல் தோல்வியடைந்துள்ளது.இதையடுத்து இந்தியா 30 பராக் ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆர்டர் இஸ்ரேலைச் சேர்ந்த ராபேல் ஆர்மமென்ட் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பராக்ஏவுகணையின் செயல்திறனைப் பரிசோதித்துப் பார்த்த இந்திய கடற்படை அதிகாரிகள் அந்த ஏவுகணை சரியாகச்செயல்படுவதாகத் தெரிவித்து விட்டனர்.
மேலும் திரிசூல் ஏவுகணை குறித்த ஆராய்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. மோசமான வானிலை காரணமாகஅந்த ஏவுகணையினால் இலக்கைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
அதுதவிர பாகிஸ்தானுடன் எந்த நேரமும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் பராக் ஏவுகணையை வாங்கிய தீரவேண்டும் என்று கடற்படை அதிகாரிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications