கபில் தேவ் மீது புகார்: ரிச்சர்ட்ஸ் வருத்தம்
1970ம் ஆண்டிலேயே கிரிக்கெட் மேட்ச் பிங்சிங்கும் பண மோசடிகளும் பரவி இருந்தன என மேற்கிந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறினார்.
டெல்லியில் அவர் கிரிக்கெட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலிருந்து:
1974-75ம் ஆண்டில் கிளைவ் லாயிடின் தலைமையில் பாகிஸ்தானில் விளையாடச் சென்றோம். அப்போது நாங்கள் டாசில்தோற்றோம். ஆனால், நாங்கள் தான் வென்றதாக அப்போதயை பாகிஸ்தான் கேப்டன் கூறிவிட்டார். இதை லாய்ட்சே என்னிடம்தெரிவித்தார். அந்த பாகிஸ்தான் கேப்டனின் பெயரை வெளியிட முடியாது. இந்த மேட்ச் பிக்சிங் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளவிரும்பவில்லை.
1983ம் ஆண்டில் உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் மேற்கு இந்தியத் தீவுகள் தோற்றது. இதில் கூட மேட்ச் பிக்சிங்நடந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் போட்டியில் கபில் தேவ் கேட்ச் பிடித்து என்னை அவுட் செய்தது தான் மிகப் பெரிய திருப்பமாகஅமைந்தது. அதில் தோற்றவுடன் பல மேற்கிந்திய வீரர்களுக்கு காய்ச்சலே வந்துவிட்டது.
கபில் தேவுக்கு எதிராக மேட்ச் பிங்சிங் புகார் கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம் தந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில்உண்மையிருக்க வாய்ப்பில்லை. இந்தியன் என்ற பெருமையுடன் கிரீசில் புகுந்து தன்னுடைய முழு உழைப்பையும் தந்தவர் கபில்தேவ் என்றார் ரிச்சர்ட்.












Click it and Unblock the Notifications