தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மே 09, 2000
கண்ணம்மா - என் காதலி - 5
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியு தடீ!(1)
மேனி கொதிக்குதடீ!- தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் -இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ!-இந்த வையகம்
மூழ்கித் துயினிலே,
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?(2)
கடுமையுடையதடீ!-எந்த நேரமும்
காவலுள் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் -எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை-கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசியவள்-எதற்காகவோ
நாணித் குலைந்திடுவாள்.(3)
கூடிப் பிரியாமலே-ஓரி ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்த்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் -நிற்மவே தவம்
பண்ணிய தில்லை யடி!
(அடுத்து கண்ணம்மா என் காதலி 6)
Back To Index












Click it and Unblock the Notifications