மகேஷ், லியாண்டர் மீண்டும் இணைவார்களா?
மும்பை:
பிரஞ்ச், விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் மீண்டும் ஜோடி சேருவார்களா என்பதுகுறித்து சில நாட்களில் தெரியவரும்.
6 மாதங்களுக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதையடுத்து பூபதி பயசிடமிருந்து விலகினார். வரும் சிட்னி ஒலிம்பிக்சில்இந்த இருவருமே சேர்ந்து விளையாடுவர் என பயசின் தந்தை கூறினார்.
ஆனால், அதற்குப் பின்னர் இருவரும் சேர்ந்து விளையாடுவார்களா என்பது சந்தேகமே. டச்சுக்காரரான ஜேன் சிம்மரிங்க் உடன்இனி ஜோடி சேர்ந்து விளையாட லியாண்டர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை ஆர்லாண்டோவில் நடந்த அமெரிக்கன் சிட்டி கிளே டைட்டில் போட்டியில் லியாண்டரும் ஜேனும் சேர்ந்துவிளையாடி வென்றனர். இதே போட்டியில் பூபதி, அமெரிக்கரான வெய்ன் ஆர்தர்சுடன் சேர்ந்து விளையாடினார்.
எனவே, இனி எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து விளையாடுவது கேள்விக்குறி தான்.