For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
யாழ்பாணத்தில் ராணுவத்தினர் மீது புலிகள் 2 முறை தாக்குதல்

கொழும்பு:

யாழ்பாணம் அருகே இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை 2 முறை தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் திருப்பித் தாக்கியது.

பலாலியில் இந்தத் தாக்குதல் நடந்தது என அரசு தெரிவித்துள்ளது. அதிகாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர்மீது 2 பிரிவாக பிரிந்து வந்த விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிகள், மெஷின் கன்கள், மார்ட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராணுவத்தினர்திருப்பிச் சுட்டதையடுத்து புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு வாபஸ் பெற்றனர்.

முதல் தாக்குதல் 30 நிமிடங்கள் நீடித்தது. இரண்டாவது தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது என அரசு அறிவித்துள்ளது.பாதுகாப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அரசு கூறுகிறது.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X