தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 4 குழுக்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் புலானாய்வு அமைப்புக்கு ஜி.சி சக்சேனாவும், உள்நாட்டு பாதுகாப்பு குழுவுக்கு என்.என். வோரவும்,எல்லைப் பகுதி பாதுகாப்புக்க டாக்டர் மாதவ் கோட்போலேவும், ராணுவ நிர்வாக கண்காணிப்பு குழுவுக்குமுன்னாள் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அருண் சிங்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுக்கள் 3 மாதத்தில் தங்களது அறிக்கைகளை அரசிடம் சமர்பிக்க வேண்டும். கார்கிலில் பாகிஸ்தான்ராணுவமும் ஆப்கான் தீவிரவாதிகளும் ஊடுருவியதையடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்து முழு அளவில் ஆராயஇந்தக் குழக்களை அமைக்கப்பட்டுள்ளன.
கார்கில் ஊடுருவல் குறித்து விசாரித்த சுப்பிரமணியம் கமிட்டி இந்த கமிட்டிகளை அமைக்க அரசுக்குபரிந்துரைத்தது.
இந்தக் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலான குழு தான் அமைத்தது. அத்வானிதலைமையிலான இந்தக் குழுவின் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.