தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னை கோட்டை முன் (சட்டமன்றம்) போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என முதல்வர்கருணாநிதி கூறினார்.
அவ்வாறு அனுமதித்தால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விடுவார்கள். அப்படி ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் அதற்கு எதிர் கட்சிகளை பொறுப்பு ஏற்க செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த ஆளும் கட்சியினருக்கு கூட அனுமதி மறுக்க்ப்பட்டுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் வெள்ளிக்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் பேசினார். அவருக்கும் முதல்வருக்கும்இடையில் நடந்த விவாதம் வருமாறு:
ஹேமச்சந்திரன்:
ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஒரு இடத்தில் உண்ணா விரதம் நடத்தஅனுமதி கேட்டால், இன்னொரு இடத்திற்கு போலீசார் அனுமதி தருகின்றனர்.
இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு பின்னர், உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று என்றைக்குபோராட்டமோ அதற்கு முன் தினம் இரவு தகவல் தருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் அனுமதி கேட்டால், அரும்பாக்கத்திற்கு தருகின்றனர். எந்த இடத்தில் போராட்டம் நடத்தவேண்டும் என்ற உரிமையை போலீசார் எடுத்துக் கொள்வது ஏன்?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:
அரும்பாக்கம் ஒன்றும் போராட்டம் நடத்த அருகதை அற்ற இடமல்ல.
ஹேமச்சந்திரன்:
பிரச்னை அதுவல்ல. எந்த இடத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை போலீசார் எப்படி தீர்மானிக்கமுடியும்.அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கோட்டை முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டால்அண்ணாநகரில் நடத்துங்கள் என்கிறார்கள்.
முதல்வர்:
கோட்டை முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், அதற்கு கொஞ்சம் தூரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிஅருகிலோ அல்லது அரசு விருந்தினர் மாளிகை அருகிலோ அனுமதி தரப்படும்.
கோட்டை முன்பே போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் , உங்களைப் போன்ற நல்ல தலைவர்களையும் மீறிசமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். அதன் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். அப்படிஅசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்க முடியாது.
உங்களைப் பொறப்பேற்க வேண்டும் என்று நாங்களும் கூற முடியாது. அதனால் தான் அனுமதி மறுக்கப்படுகிறது.அதே போல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் அனுமதி மறுக்கப்படுகிறது. அண்ணா சாலையில்போராட்டம் நடத்த ஆளும் கட்சிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications