For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
"தொண்டை வலி, நீரிழிவு": நீதிமன்றம் வரவில்லை தினகரன், இளவரசி

சென்னை:

வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தொண்டைவலியும், சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு நீரிழிவு நோயும் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றுஅவர்களது வக்கீல் விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்குஅதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணை முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணைநடைபெறுகிறது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒருவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதிஆறுகபெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது யாரும் ஆஜராகவில்லை. ஆனால், சுதாகரன், இளவரசி சார்பில்ஆஜராகாததற்கு விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், இளவரசிக்கு நீரிழிவு நோய் என்றும், சுதாகரனுக்கு தொண்டை வலி என்றும், அதன் காரணமாக நீதிமன்றம் வரஇயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாளைய விசாரணையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X