தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணத்தில் தொலைபேசி இணைப்புகள் அனைத்தையும் இலங்கை அரசு துண்டித்துள்ளது.
ராணுவத்தின் நடமாட்டம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு பொது மக்கள் தகவல் தருவதாகக் கூறி இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது யாழ்பாணத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் தாங்கள் நிலை கொண்டிருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு புலிகளின் ரேடியாவும் கேட்டுக்கொண்டுள்ளது.
வவுனியா காட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் இந்த வானொலி நிலையத்தை இயக்கி வருகின்றனர்.
அரியாலி பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தீவிரமானதையடுத்து அங்கிருந்த தனது படைகளைராணுவம் திரும்ப அழைத்துள்ளது.
இந்தப் பகுதியில் ராணுவம் அமைத்த புதிய முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலை ராணுவத்தால் சமாளிக்க இயலவில்லை.
இதையடுத்து அங்கிருந்து சில கி.மீ. தூரத்துக்கு உடனடியாக பின்னேறுமாறு வீரர்களுக்கு ராணுவம் உத்தரவிட்டது.இது தாற்காலிகமான பாதுகாப்பு நடவடிக்கை தான் என இதற்கு ராணுவம் விளக்கம் தந்துள்ளது