கோலாம்பூர் பேட்மிட்டன்: இன்று இந்தியா-டென்மார்க் போட்டி
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடந்து வரும் 2000 ம் ஆண்டிற்கான தாமஸ் கோப்பை பேட்மிட்டன் போட்டியில் இன்று(வெள்ளிக்கிழமை) டென்மார்கை இந்தியா சந்திக்கிறது.
இப்போதைய சாம்பியனான இந்தோனேஷியா வியாழக்கிழமை சுவீடனை வென்றது.
இந்தோனேஷியா கிட்டத்தட்ட 11 முறை தாமஸ் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. 1994 ம் ஆண்டுமுதல் 3முறை தொடர்ந்து வெற்றி பெற்றி வருகிறது. அதற்கு முன்பும் தாமஸ் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
இந்தோனேஷியா ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வரும் 13 ம் தேதி சீனாவை எதிர்த்தும், வரும் 16 ம் தேதிஇங்கிலாந்தை எதிர்த்தும் விளையாடுகிறது.
இந்தோனேஷிய பயிற்சியாளரான கிரிஸ்டியன் ஹடினாடா கூறுகையில், இந்தோனேஷியா வீரர்கள் குறித்துமிகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுவீடன் அவ்வளவு பலமில்லாத அணி. அவர்களை வென்றுவிட்டோம்.இப்போது சீனாவை எதிர் கொள்ள தயாராகி வருகிறோம் என்றார்.
மேலும் எங்கள் பிரிவில் ரெக்சி மினாக்கி மற்றும் ரிக்கி சப்காஜியா பேட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில்மிகச்சிறந்து விளங்குவார்கள் என்றார்.
யு.என்.ஐ.