தமிழகத்தில் இன்று
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளும் இலங்கை ராணுவமும் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்நிலையில், தமிழகத்தில் புலிகள் ஆதரவு கட்சிகளுக்கும் எதிர்க்கும் கட்சிகளுக்கும் இடையே பெரும் "வாய்ப்போரும்", அறிக்கைப் போர்களும் நடந்து வருகின்றன.
சட்டசபையில் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக நடைபெற்ற விவாதம் வருமாறு:
டாக்டர் செல்வகுமார் (த.மா.க.ா):
தமிழக போலீசார் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு நிறைய தலையீடுகள் வருகின்றன.இதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையும் ஆபத்து ஏற்ப்டடுள்ளது.
விடுதலைப் புலிகள் நடமாட்டம் மீண்டும் தலை தூக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால்தி.மு.க. ஆட்சியில் தான் புலிகள் நடமாட்டம் அதிரகரித்தது.
பத்மநாபா என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் கொல்லப்பட்டார். கொலையாளிகள் தப்பி சென்றனர். இதனால் தமிழ்மண்ணில் ராஜீவ் காந்தியை இழந்தோம்.
இந் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாநாடு சிதம்பரத்தில் நடத்தப்பட்டுள்ளது. இம் மாநாட்டுக்குபோலீஸ் தடை விதித்திருந்தாலும் அந்த ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் ஒலி பெருக்கி இல்லாமல்நடைபெற்றுள்ளது.
இதே போன்று திருவாரூர், திருச்சி, மதுரையிலும் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ராமநாத புரத்தில்பாசிப்பட்டினம் வழியாக புலிகளுக்கு டீசல், பெட்ரோல் எடுததுச் செல்லப்படுகிறது.
ஜி.கே.மணி (பா.ம.க.):
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதை கூட கொச்சைப் படுத்துகின்றனர். உலகளாவிய தமிழர்கள் ஒருமித்தஉணர்வுடன் இருக்கும் போது, இங்குள்ள தமிழர்களுக்கு மட்டும் உணர்வு இல்லை.
செல்வகுமார்:
நாங்கள் தமிழ் இன மக்களை எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகளை தான் எதிர்க்கிறோம். அது தடைசெய்யப்பட்ட இயக்கம். அதை எந்த கட்சி ஆதரித்தாலும், அது தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அர்த்தம் என்றார்












Click it and Unblock the Notifications