தமிழகத்தில் இன்று
திருப்பதி:
பெட்ரோலியம், டீசல் விலை உயர்வு அடுத்த மாதம் குறைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் பொன்னுச்சாமிகூறினார்.
திருப்பதியில் அவர் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலைகளுக்குத் தகுந்தது போல் பெட்ரோல் விலை நாடு முழுவதும்நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது பெட்ரோல் உற்பத்தியை அதிகரித்து பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்க பெட்ரோல் உற்பத்திசெய்யும் நாடுகள் உத்தரவாதம் அளித்துள்ளன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை அடுத்த மாதம்குறைக்கப்படலாம்.
தற்போது 70 சதவீதம் பெட்ரோல் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.இந்தியாவிலிருந்து 30 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
2002 ம் ஆண்டிற்குள் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் முழுவதும் குறைக்க வேண்டும் என்று மத்தியஅரசு முயற்சித்து வருகிறது.
மேலும் எண்ணெய்க் கிணறுகள் அமைத்து பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யவும் எரிவாயு கமிஷன்நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இதனால் மத்தியஅரசு பெட்ரோலிப் பொருட்களுக்கான விலையை அடுத்த மாதம் குறைக்கலாம் என்று தெரிகிறது.
இவ்வாறு மத்தியஅமைச்சர் பொன்னுச்சாமி கூறினார்.
யு.என்.ஐ.