செயலை விட அதன் பயனை நேசித்தால்!
டெல்லி:
இந்தியாவுடன் கார்கில் பகுதியில் நடந்த போர் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாரில்லை என்று அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின்பத்திரிகை ஆலோசகர் ஜாவேத் ஜப்பார் கூறியுள்ளார்.
பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் உருது செய்திக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியில் ஜாவேத் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நிலையை தெளிவாக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் எங்களிடம் ஒளிவு மறைவு இல்லை. எனவே கார்கில்விவகாரம் குறித்து இந்தியா விசாரணை நடத்த உத்தரவிட்டதுபோல, நாங்கள் செய்ய மாட்டோம்.
காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்ற முஜாஹிதீன்கள் (காஷ்மீர் தீவிரவாதிகள்) விரும்புகின்றனர். அவர்களுக்கு நாங்கள் தார்மீக ஆதரவு தருவதில் எந்தரகசியமும் இல்லை.
கார்கில் போரின்போது நிலவிய உண்மை நிலையை முழுமையாக புரிந்து கொள்ள அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசு தவறி விட்டது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications