செயலை விட அதன் பயனை நேசித்தால்!
நாசிக்:
காஷ்மீரில் ஹரியத் தலைவர்களை விடுவித்தது போல, விரைவில் பஞ்சாபில் கைதாகி சிறையில் உள்ள சீக்கியத் தீவிரவாத தலைவர்களும் விடுதலைசெய்யப்படுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
நாசிக் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காஷ்மீரில் நீண்ட காலம் சிறையில் இருந்த ஹரியத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல,பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ள சீக்கியத் தலைவர்களை விடுவிப்பது குறித்து அரசு யோசித்துவருகிறது.
பஞ்சாபில் தீவிரவாதம் ஒழிந்து விட்டது. எனவே இப்போது சிறையில் உள்ளவர்கள் மீதான வழக்குகளைப் பரிசீலனை செய்வது குறித்து அரசு யோசித்துவருகிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட வேண்டிய தலைவர்கள் குறித்த பட்டியலைதயாரிக்குமாறு எனது துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஹரியத் தலைவர்கள் விடுதலை செய்யப்படும் போது, பஞ்சாப் தலைவர்கள் விடுவிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications