செயலை விட அதன் பயனை நேசித்தால்!
கோயம்பத்தூர்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். சுப்ரமணிய சுவாமி கூறும் மூன்றாவது கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு நேற்று தெரிவித்தார்.
இதன்மூலம் சுவாமிக்கு திருநாவுக்கரசு பெரிய கும்பிடு போட்டுள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். அதிமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கலந்து கொள்ள முதல்வர், பிரதமர்ஆகியோருக்கு அழைப்பு விடுப்போம்.
சுப்ரமணிய சுவாமி, மூப்பனார் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க முயற்சி செய்து வருகிறார். என்னை துணை முதல்வராக போட்டியிடச் செய்வதாககூறியுள்ளார். ஆனால், அந்த கூட்டணியில் எம்.ஜி.ஆர். அதிமுக பங்கேற்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்போம். திமுக வெற்றி பெற்றால் அந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.
இலங்கை பிரச்சினையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று திருநாவுக்கரசு கூறினார்.