For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை பிரச்சனை: புதிய அரசியல் தீர்வுக்கு அரசு முயற்சி

கொழும்பு:

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசியல் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டம் வரும்ஆகஸ்ட் மாதத்தில் பார்லிமென்டில் சமர்பிக்கப்படும் எனவும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

திங்கள்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையே திங்க்கிழமை கொழும்புவில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்போதைய யாழ்பாணநிலைமை குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்கா விளக்கினார். யாழ்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களையும்பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிபரில் இல்லாமன "டெப்பிள் ட்ரீசில்" 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகளின்பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

யாழ்பாணத்தில் ராணுவம், விடுதலைப் புலிகளின் நிலைகள் குறித்து பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்அணிருத்த ரத்வதே வரைபடங்களுடன் விளக்கினார்.

பேச்சுவார்தை மூலம் அரசியல் தீர்வு காண தான தயாராக உள்ளதாகவும் ஆனால், விடுதலைப் புலிகளுக்குத் தான்அமைதியில் நம்பிக்கையில்லை எனவும் சந்திரிகா அந்தக் கூட்டத்தில் கூறினார்.

பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவின் உதவியை நாட வேண்டும் என தமிழர் கட்சிகள் கூட்டத்தில் வலியறுத்தின.சில கட்சிகள் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றன.

இந் நிலையில் கொழும்பில் அமலாக்கப்பட்டுள்ள பத்திரிக்கை தணிக்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர்லட்மண் கதிர்காமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சி.என்.என். டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத்தெரிவித்தார். இந்தத் தடை மூலம் எந்தப் பயனும் இல்லை என்றார்.

யாழ்பாணம் இலங்கையின் ஒரு பகுதி. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதை இலங்கையிலிருந்துபிரிக்கவும் விட மாட்டோம். பாசிஸ சக்திகளான எல்.டி.டி.ஈ. தங்கள் மண்ணுக்குள் வருவதை யாழ்பாணத்தில்உள்ள தமிழர்களே விரும்பவில்லை என்றார்.

இதற்கிடையே, இலங்கையில் அமலாக்கப்பட்டுள்ள ராணுவ தணிக்கை (சென்சார்) மூலமாக மக்களின் அடிப்படைஉரிமைகள் பாதிக்கப்படாது என அந் நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த சுனலா அபேசேகரா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. சுனிலா, தனது மனுவில் மனித உரிமைகளுக்கு தடை விதிக்கும் இந்த தணிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

யாழ்பாணத்தில் குருநகர் பகுதியில் புலிகள் நடத்திய தாக்குதலில் இறந்த பொகு மக்களின் எண்ணிக்கை 6 ஆகஉயர்ந்துள்ளது. இத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர். பொன்னேரியன் பகுதியிலிருந்து புலிகள் இந்தத்தாக்குதலை நடத்தினர் என ராணுவம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X